Monday, February 14, 2011

"கரப்ட்" ஆன Outlook Express & Outlook ஈமெயில் ஃபோல்டர்களை மீட்டு எடுக்க

இணைய வாசகர்களுக்கு வணக்கம்,

எனக்கு ஏதோ கொஞ்சம் இருக்குற கணிப்பொறி அறிவுல எனக்கும் தெரிஞ்ச ஒரு விஷயத்தை உங்ககிட்ட பகிர்ந்து கொள்கிறேன்.
நாம் GMail, Yahoo, Msn, Rediff-னு எத்தனையோ மின்னஞ்சல்களை பயன் படுத்துகின்றோம். நாம் அதிகமாக நேரடியாக அந்த தளங்களுக்கே சென்று நமக்கு வந்த மின்னஞ்சல்களை பார்க்கின்றோம். ஒருசிலர் Outlook Express, Ms-Outlook, Thunderbird, Incredimail போன்றவற்றில் POP3 Account ஆக இணைத்து பயன்படுத்துவார்கள்.
அலுவலகத்திற்கென்று தனியாக Email Domain வைத்திருப்பவர்கள் அதிக அளவில் Outlook Express, Ms-Outlook ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். நாம் முக்கியமான ஈ-மெயில்களை ரூல்ஸ் போட்டு தனித்தனி ஃபோல்டர்களில் வைத்திருப்போம். முதல் நாள் வரைக்கும் நல்லாதான் இருக்கும் மறுநாள் கம்ப்யூட்டரை இயக்கி மெயில் செக் பண்ணலாம்னு Outlook Expess or Outlook Open பண்ணினா இன்பாக்ஸ் அல்லது ஒருசில ஃபோல்டர்களில் "There is no messages to view in this box" அப்படின்னு காட்டும். Deleted Items -லயும் இருக்காது. என்ன முயற்சி பண்ணினாலும் அந்த மெயில்களை பார்க்கவே முடியாது. என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறீங்களா??

அப்படின்னா உங்களுக்குதான் இந்த பதிவு. முதலில் மெயில் காணாம போன ஃபோல்டரில் Right Click செய்து Properties போங்க. அதுல அந்த போல்டர் சைஸ் என்ன காட்டுதுன்னு பாருங்க. சைஸ் காட்டினா உங்க மெயில் இருக்குன்னு அர்த்தம். (சில நேரம் அதிகமா கரப்ட் ஆயிருந்தா மீட்க முடியாது). மேலும் அந்த ஃபோல்டர் எங்க சேவ் ஆயிருக்கோ அதோட லொக்கேசனனையும் பார்த்துக்கோங்க. இப்போ கீழே கொடுத்திருக்குற DOWNLOAD பட்டனை க்ளிக் செய்து சாஃப்ட்வேரை தறவிக்கம் பண்ணிக்கோங்க.
(No Installation Required & No Spyware)
ZIP ஃபைல்-லா இருக்குற இந்த சாஃப்ட்வேரை Extract பண்ணினா அதுல Calcrecovery.exe அப்படின்னு ஒரு ஃபைல் இருக்கும். அதை டபுள் க்ளிக் செய்து ஓபன் பண்ணினா கீழே உள்ள படத்தில் இருக்குறது போல ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

அதுல Toolbox க்ளிக் பண்ணினா அடுத்த படத்துல காட்டுறது போல ஒரு லிஸ்ட் வரும், இதுல நமக்கு தேவையான wor, excel, cd, dvd, hard disk, Undeleted file போன்ற ஆப்சன் செலக்ட் பண்ணிக்கலாம்.


நமக்கு Outlook Express அல்லது Outlook -ல உள்ள மெயில் வேணும்னா அந்த ஆப்சன் செலக்ட் பண்ணுங்க. இப்போ Recover பட்டன் க்ளிக் பண்ணினா புதுசா ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதுல நம்ப மெயில் சேவ் ஆகியிருக்குற லொக்கேசன் செலக்ட் பண்ணி எந்த ஃபோல்டர்ல உள்ள மெயில் வேணுமோ அதை செலக்ட் பண்ணி Recover கொடுங்க. Recover ஆன பிறகு உங்க மெயில் பாக்ஸ் ஓப்பன் பண்ணினா நாம எந்த ஃபோல்டர் ரெக்கவர் பண்னினமோ அதுக்கு முன்னால Recovered என்ற பெயரோட நம்முடைய மெயில்கள் இருக்கும்.

இதில் ஏதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது நான் ஏதாவது தவறாக சொல்லியிருந்தாலோ பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Valentine's Day Special Song:

"எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்" 

குறிப்பு: ஏர்டெல் சர்வரில் ஏற்பட்ட குளறுபடியால் பல பேருக்கு ப்ளாக்ஸ்பாட் ஓபன் ஆகவே இல்ல. அந்த மாதிரியான நேரங்களில் http://www.iphider.org/ என்ற தளத்தில் நுழைந்து ப்ளாக்ஸ்பாட் அட்ரஸ் கொடுத்து OK கொடுத்தால் ஓபன் ஆகும். ஆனால் ஒருசில ஜாவா ஃபங்சன்ஸ் ஒர்க் ஆகாது.


Thursday, February 3, 2011

விடுமுறை பயணம் - சுவாமிமலை, கல்லணை

வணக்கம் நண்பர்களே
முந்தைய பதிவான விடுமுறைப் பயணம் - அசோகா அல்வா, பொங்கல், கல்லணை -யின் தொடர்ச்சியாக இந்த பதிவு. எழுதுவதற்கு கொஞ்சம் சோம்பேறித்தனம். அதான் இம்புட்டு லேட்டு.
சரி விஷயத்துக்கு வர்றேன். பொங்கல் அன்னைக்கு காலையில லேட்டாதான் எழுந்தேன். பல் தேய்ச்சிட்டு வ்ந்ததும் சாப்பிடுற நேரம் ஆச்சு, சாப்பிடுறியா இல்ல டீ வேணுமா அப்படின்னு அம்மா கேட்டாங்க. டீ குடுங்க அப்பறமா சாப்பிடுறேன்னு சொன்னேன். வழக்கமா வீட்ல என்ன பண்ணுவோம்? டீ குடிக்கும் போது டிவி பார்த்துகிட்டே குடிப்போம். அதையேதான் நானும் பண்ணினேன். டிவி-ல லியோனியோட பட்டி மன்றம் கலைஞர் தொல்லைக்காட்சில ஒளிபரப்பினாங்க.
பட்டிமன்ற துளிகள்:
 நம்ம கலைஞர் கவட்மெண்ட்டு வேலையெல்லாம் விட்டுபுட்டு பட்டிமன்றத்துக்கு அமைச்சர்கள் படைசூழ வந்திருந்தாரு.லியோனிக்கும் வேற வழி தெரியல. அவரும் கலைஞர் புகழை அடிக்கடி பாடினார். அதோட ஒரு அமைச்சரைப் பற்றியும் பேசினார். அது என்னன்னா ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சில அந்த அமைச்சர் கலந்துகிறதா இருந்திருக்காரு. அவரை வரவேற்க ”ட்ரம்ஸ்” ஏற்பாடு பண்ணியிருக்காங்க. ட்ரம்ஸ் வாசிக்கிறவங்களுக்கு அமைச்சர் கார் எதுன்னு தெரியல. முதல்ல ஒரு கார் வந்ததும் வாசிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். பார்த்தா அதிலேர்ந்து நம்ப லியோனி இறங்கியிருக்காரு. நிகழ்ச்சி அமைப்பாளர் ட்ரம்ஸ் வாசிக்கிரவங்கள கூப்பிட்டு எதுக்குய்யா லியோனிக்கெல்லாம் வாசிக்கிறீங்க, அமைச்சர் கார் வ்ரும்போது வாசிச்சா போதும்னு சத்தம் போட்டிருக்காரு. 
அடுத்ததா ஒரு கார் வந்திருக்கு, அமைச்சர்தான் வர்றார்னு அதிரடியா வாசிச்சிருக்காங்க அந்த ட்ரம்ஸ் பார்ட்டி. ஆனால் வந்தது வேற ஒரு ஆளு. மறுபடியும் திட்டு வாங்கிகிட்டாங்க. 
அடுத்து மூனாவதா ஒரு கார் வந்திருக்கு. இவங்க யாரும் கண்டுக்கவே இல்லையாம். வாசிக்கவும் இல்லையாம். பார்த்தா அந்த கார்லதான் அமைச்சர் வந்திருந்தாராம். இவங்க வாசிக்காம விட்டது அமைச்சருக்கு ரொம்ப அவமானமா போச்சாம். எதுவுமே வெளில காட்டிக்காம உள்ள போயிருக்காரு. இந்த விஷயத்தை லியோனி பேசும்போது மேடையில எல்லார்கிட்டேயும் சொல்லிட்டாராம். அதுக்கு அமைச்சர் பேசும்போது சொன்னாராம் அவங்க வாசிக்காதது கூட எனக்கு அவமானமா தெரியல. ஆனா நீங்க மேடையில சொன்னதுதான் அவமான இருக்கு அப்படின்னு சொன்னாராம். அந்த அமைச்சரும் இந்த பட்டி மன்றத்துக்கு வ்ந்திருந்தாரு. அவரு ரொம்ப நகைச்சுவை உணர்வு உள்ளவ்ர் அப்படிங்குறதுக்கு உதாரணமா அந்த சம்பவத்தை மறுபடியும் மேடையில சொல்லி அவர புகழ்றதா நினைச்சு மறுபடியும் அதை எல்லார்கிட்டேயும் உளறிட்டார் லியோனி. இதுதான் எனக்கு பெரிய காமெடியா இருந்துச்சுங்க. பாவம் அவரும் என்ன பண்ணுவாரு “முத்தமிழ் அறிஞர்” முன்னால அவருக்கு என்ன பேசுறதுன்னே தெரியல. ஒரு பயத்தோடவே பேசினார்.
அது முடிஞ்சதுக்கு அப்பறம் பாலிமர் டிவி-ல ஒரு லியோனியோட பட்டிமன்றம் ஒளிபரப்புனாங்க, அது பார்க்க நல்லா நகைச்சுவையா இருந்துச்சு. லியோனி லியோனிதாங்க.
பொங்கல்:
அப்பறம் மதியம் மணி 12க்கு மேல ஆச்சு. ரொம்ப நாளைக்கு அப்பறம் எங்க ஊரு ”குடமுருட்டி” ஆற்றில் குளிக்க போனேன்.  ஒரு மணி நேரம் நல்லா உல்லாசம குளிச்சிட்டு வீட்டுக்கு வந்தா மணி 01:30 ஆச்சு. வீட்ல பொங்கல் பூஜை போட ஆரம்பிச்சிட்டாங்க. நானும் அதுல கலந்துகிட்டு சூரியனுக்கு எல்லாம் படைச்சிட்டு எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தாங்க. நான் என் நண்பனை சாப்பிட கூப்பிட்டுகிட்டு வர்றதா சொல்லிட்டு கிளம்பிட்டேன். அவன் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன். அதனால தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு என் வீட்டுக்கு வந்துடுவான். ரம்ஜான், பக்ரீத்-க்கு அவன் என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிடுவான். நானும் பிரியாணி சாப்பிட போயிடுவேன்.
அப்பறம் நாங்க ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டோம். என்ன சின்ன வயசுல இருந்த ஒரு ஆர்வம் இப்போ எதுலேயும் இல்ல. கொஞ்ச நேரம் பேசிகிட்டிருந்தோம். அப்போ இன்னொரு ஃப்ரண்டு கால் பண்ணி மச்சா ஃப்ரியாதான இருக்க என் வீட்டுக்கு வாடான்னு கூப்பிட்டான். சரிடான்னு நானும் என் நண்பனும் பாபநாசத்துல உள்ள அவனோட வீட்டுக்கு போனோம். அவனோட பேசிகிட்டிருந்தோம். பக்கத்துல பாசலா தியேட்டர்-ல ஆடுகளம் ரிலீஸ் பண்ணியிருந்தாங்க. வாடா போகலாம்னு கூப்பிட்டா பயபுள்ள உங்ககூட மட்டும் வரவே மாட்டேண்டா அப்படின்னுட்டான். ஏன்னா தீபாவளி அன்னைக்கு அதே தியேட்டர்ல வ குவார்டர் கட்டிங் ரிலீஸ் பண்ணியிருந்தாங்க. வரமாட்டேன்னு சொன்னவன பிடிவாதமா கூட்டிகிட்டு போனோம். அத பார்த்து வெறுத்து போனவன்தான். அதுக்கபறம் படம் பார்க்க கூப்பிட்டாலே அவன் வற்றதே இல்ல. அவன் சுவாமிமலை முருகன் கோவிலுக்கு ஒய்ஃப் கூட போறேன் நீங்களும் வாங்கன்னு கூப்பிட்டாம். நாங்களும் படத்துக்கு போறத கேன்சல் பண்ணிட்டு கோயிலுக்கு கிளம்பினோம்.
சுவாமிமலை: கோயிலுக்கு முன்னாலயே நிறைய கூட்டம். பைக் பார்க்கிங் பொது வழியிலேயே நிறுத்த சொல்லி அதுக்கும் டோக்கன் வாங்குறாங்க. அப்போதாங்க அது நடந்துச்சு. நான் என் பைக்க நிறுத்த போனப்ப சறுக்கி விட்ருச்சு. நல்லவேலையா நான் தப்பிச்சிட்டேன் ஆனா என் பைக் விழுந்து அடி பட்ருச்சு. தார் ரோட்டை சுத்தம் பண்ணாம விட்டதால மணல்தான் ரோட்டுல இருக்கு. என்னைப் போல எத்தனைபேரு சறுக்கி விழுந்தாங்க தெரியல. அர்ச்சனை தட்டு வாங்கிகிட்டு உள்ள போனோம். இருக்குற கூட்டத்துல இலவச தரிசனம் போனா சீக்கிரம் உள்ளவும் போக முடியாது, வெளியேவும் வர முடியாது. அதானால சிறப்பு வழி தரிசன சீட்டு ஆளக்கு 20 ரூபாய்னு வாங்கினோம்.
கோயில்-ல அடிக்கிறாய்ங்க கொள்ளை: அர்ச்ச்னை பண்ணனும்னா அதுக்கு தனியா அர்ச்சனை சீட்டு வாங்கனும்.  போன வருசம் நான் போனப்ப 2 ரூபாய்தான் அர்ச்சனை சீட்டு. ஆனா இந்த வருஷம் 5 ரூபாய் வாங்கினாங்க. என்னடான்னு பார்த்தா அர்ச்சனை சீட்டுல 2 ரூபாய்தான் போட்டிருக்கு, ஆனால் அர்ச்சனை சீட்டோட ஒரு எண்ணைய் பாக்கெட் கொடுக்குறாங்க, ஏதோ பஞ்ச தீப எண்ணை அப்படின்னு போட்டிருக்கு. VVD Gold -னு ஒரு எண்ணை பாக்கேட் 50 பைசாவுக்கு பெட்டி கடையில கிடைக்கும் பாருங்க அதே சைஸ் தாங்க கோயில்ல கொடுத்த எண்ணை பாக்கேட். விலை மட்டும் 3 ரூபாய் அதோட சேர்த்துதான் 5 ரூபாய்க்கு அர்ச்ச்னை சீட்டு கொடுக்குறாங்க. கட்டாயமா நாம அந்த எண்ணெய் பாக்கெட் வாங்க வைக்கிறாங்க. 50 பைசா எண்ணைய் பாக்கெட் 3 ரூபாய். யாரு யாருகெல்லாம் கமிசன் போகுதோ????? இதைவிட பெரிய கொடுமை அர்ச்சனை பண்ணி முடிச்சதும் நம்மளோட அர்ச்சனை தட்டை நம்மகிட்ட கொடுக்க அர்ச்சனை சீட்டோட குருக்கள் காணிக்கை 10 ரூபாய் கொடுங்கன்னு கேட்டு வாங்கிகிட்டுதான் அர்ச்ச்னை தட்டை நமக்கு கொடுக்குறாரு. என்ன கொடுமை சார் இது, வாங்குறது லஞ்சம் அதுக்கு பேரு காணிக்கை!!!??? அதையும் கொடுத்துட்டுதான் அர்ச்சனை தட்டு வாங்கிகிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
மறுநாள் மாட்டுப் பொங்கல் அதையும் சிறப்பாவே கொண்டாடிட்டு ஜனவரி 17 திருப்பூர் நோக்கி மறுபடியும் என் பைக்-ல திருவையாறு, கல்லணை, திருச்சி வழியா பயணமானேன். நம்ம ”இரவுவானம்” சுரேஷ் வரும்போது திருவையாறு அசோகா அல்வா வாங்கி வாடான்னு பணம் கொடுத்டுவிட்டாரு. ஆனால பொங்கல் காரணமா நான் வரும்போடு எல்லா கடையும் பூட்டியே இருந்துச்சு. அதனால வாங்க முடியல. அப்பறம் வழியெங்கும் உள்ள கிராமங்களில் பொங்கல் மற்றும் அதையொட்டி நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளையும் மக்கள் சிறப்பா கொண்டாடிகிட்டு இருந்தாங்க. அதைப்பார்த்ததும் பழைய நினைவுகளை அசைபோட்டுகிட்டே திருப்பூர் வந்து சேர்ந்தேன். மறுநாள் முதல் அதே கம்பெனி, அதே வேலை, மறுபடியும் இந்த மாதிரி ஒரு விடுமுறையை எதிர்பார்த்துகிட்டிருக்கேன்.

நான் எடுத்த புகைப்படங்கள்: 











நன்றி!!!

குறிப்பு: பிடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு, உங்க கருத்தையும் மறக்காம சொல்லிட்டுப் போங்க. 

Monday, January 31, 2011

இதற்கு பெயர்தான் காதலா???? 18+

இன்னைக்கு தினமலர் இணையதளத்துல நேற்றைய வாரமலர் பார்த்துகிட்டு இருந்தேன். அதுல ஒரு அதிர்ச்சியான கேள்வி. அது என்னன்னா காதலித்தவனையே கல்யாணம் பண்ணட்டுமா? இல்ல அவ வீட்டுல பார்த்திருக்கிற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கவா? அப்படின்னு ஒரு பொண்ணு கேள்வி கேட்டுருக்கா. அதுக்கு சகுந்தலா கோபிநாத் அப்படின்னு ஒரு அம்மா அவளுக்கு அறிவுறை சொன்னதையும் கீழே கொடுத்துள்ள இணைப்புல போய் படிச்சு பார்த்து உங்க கருத்த சொல்லுங்க.  
இதற்கு பெயர்தான் காதலா????
தமிழ் கலாச்சாரம் எங்கேயோ போயிகிட்டிருக்கு. கலாச்சார காவலர்கள் என்ன பன்ணிகிட்டிருக்காங்க?????



Friday, January 21, 2011

விடுமுறைப் பயணம் - அசோகா அல்வா, பொங்கல், கல்லணை

வணக்கம் நண்பர்களே!
எல்லோரும் பொங்கல் விடுமுறையை சிறப்பாக கொண்டாடியிருப்பீர்கள். நானும் நல்லபடியா கொண்டாடலாம்னுதான் திருப்பூரிலிருந்து என் சொந்த ஊரான (சொந்தமா ஊருவச்சிருக்குற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் இல்ல) தஞ்சை மாவட்டத்திற்கு என்னோட டிஸ்கவர் டிடிஎஸ்-எஸ்ஐ வண்டியில கிளம்பிட்டேங்க. என்ன என் வண்டி 90 கி.மீ ஸ்பீடுக்கு மேல போகாது. இங்க திருப்பூர்-ல பஸ் கிடைச்சி நான் ஊரு போயி சேரும்போது பொங்களே முடிஞ்சிருக்கும் . அவ்வளவு க்ரவ்டு. அந்த இத்துப்போன கவர்மெண்ட் பஸ்ஸுல ஏற்றதுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு க்யூ-ல நிக்கனும். அதிலயும் இந்த போலிஸ்காரங்க தான் எல்லாரையும் பஸ்ஸுல ஏற்றிவிடுவாங்க. யாராவது முன்னடியே இடம் பிடிச்சி ஏறி வந்தா அவங்களையும் இறக்கிவிட்டு மறுபடியும் க்யூ-ல நிக்க வச்சிடுவாங்க, எனக்கென்னவோ இவ்ங்க இந்த மாதிரி கெடுபிடி பண்ணாம இருந்தாலே க்ரவ்டு இருக்காதுன்னு நினைக்கிறேன். கிடைக்கிற பஸ்ஸுல ஏறி போயிகிட்டே இருப்பாங்க. க்யூ-ல நின்னா 5 மணி நேரத்துக்கு மேல ஆகும் பஸ் ஏற. அது வரைக்கும் பஸ் ஸ்டாண்டுலேயே நிக்க வேண்டியதுதான். 
அப்படியே இடம் கிடைச்சி ஏறி உட்கார்ந்தா அப்போ பார்த்து இந்த லேடிஸ் நம்மகிட்ட வந்துதான் தம்பி கொஞ்சம் எழுந்துக்கங்களென் கை குழந்தையோட இருக்கேன், இல்லனா மயக்கமா வருது நிக்க முடியல அப்படின்னு சொல்லி இடம் கேட்பாங்க. எனக்கு ஒன்னு மட்டும் புரியல! பஸ்ஸுல அத்தனை பேரு இருந்தும் அந்த லேடிஸ் பொண்ணுங்ககிட்டயோ மற்ற லேடிஸ்கிட்ட இடம் கேட்கறதே கிடையாது. கரெக்டா பாய்ஸ் & ஜென்ஸ் கிட்டதான் கேட்கிறாங்க. நம்மாளுங்களூம் உடனே இடம் கொடுத்துடுறாங்க, ரொம்ப தாராள மனசு!!!! நாமளும் அதையே தான் பண்ணுவோம். எதுக்கு இந்த வேண்டாத வேலை அப்படின்னுதான் வழக்கம் பைக்-லேயே கிளம்பிட்டேன்.
நினைச்ச நேரத்துல நினைச்ச இடத்துக்கு போறதுக்கு பைக் தாங்க வசதியா இருக்குது. போகும்போதே எங்க பொங்கலும் அதுவுமா போயி சேர்ந்துவோமோ அப்படிங்கிற பயத்தோடதான் போனேன். ஏன்னா என்கிட்ட ஹெல்மட் கிடையாது. நானும் அதை வாங்கற ஐடியாவே இல்ல. அத போட்டா சைடுல வற்ற வண்டிங்களும் தெரியாமாட்டுது, சைடுல போற பொண்ணுங்களும் தெரிய மாட்டுது. குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரியே போக வேண்டியதா இருக்கு. அதான் ஹி! ஹி!!. ஹெல்மட் போடுங்க அதான் உயிருக்கு சேஃப்டி-ன்னு சொல்லாதீங்க. ஹெல்மட் போட்டுகிட்டே நிறைய பேரு சாகுறாங்க. போனதடவ ஊருக்கு போகும்போது குளித்தலைக்கு அப்பறம் ஹெல்மட் போட்டு போன பையன் எதிரே வந்த லாரி மோதினதுல ஹெல்மட்டோட கழுத்து முறிஞ்சு போச்சு. 108 - ல கொண்டு போனாங்க பிழைச்சானா செத்தான தெரியல. 10 வது மாடியிலேர்ந்து குதிச்சு பிழைச்சவனும் இருக்கான், புல் தடுக்கி விழுந்து செத்தவனும் உண்டு. நாம போகனும்னு இருந்தா போயிதானே ஆகனும்னு போனா போற வழியில எல்லாம் கண்ணாடி துகள்களா இருக்கு. சில இடங்கள்ல இரத்தம் உரைஞ்சு போன தடங்களா இருக்கு. கரூர் வரைக்கும் எப்படியோ போயாச்சு. கரூர் டூ திருச்சி போறதுதான் கஷ்டம், ஏன்னா பல வருஷமா ரோடு போட்டுகிட்டே இருக்கானுங்க இதுவரைக்கும் முடிக்கல. அப்படியேதான் இருக்கு மாற்றங்கள் ஒன்னும் தெரியல.
                                      
என்னோட ஊரு தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டுல நெடுந்தெரு அப்படின்னு ஒரு கிராம. அதனால நான் எப்போதுமே கல்லணை போயி அங்கிருந்து திருவையாறு - கும்பகோணம் ரோட்டுல கணபதி அக்ரஹாரம் போயி அப்படியே அய்யம்பேட்டை வழியா வீட்டுக்கு போயிடுவேன். நேரமும் மிச்சமாகும், குறைவான தூரம், நோ ட்ராஃபிக். ஒரு வழியா திருச்சி போயி சேர்ந்தாச்சு.  சத்திரம் பஸ் ஸடாண்டு வழியா சென்னை பை-பாஸ் ரோட்டை க்ராஸ் பண்ணினா கல்லணை ரூட் வந்திடும்னு போனா பய புள்ளைக திடீர்னு அங்க ஃப்ளை ஓவர் கட்ட ஆரம்பிச்சு வழியே இல்லாம பண்ணிட்டானுங்க. 
எனக்கு வேற ரூட் தெரியாது. அங்க உள்ள சில பேர்கிட்ட வழி கேட்டு போனா தலையும் புரியல வாழும் புரியல. எல்லாமே சின்ன சின்ன சந்தா இருக்கு. தட்டு தடுமாறி வழிமாறி போயிட்டேன். மறுபடியும் அங்க உள்ளவங்ககிட்ட கேட்டா அவங்க ஒரு வழிய காட்டி அதுல போக சொன்னாங்க. அதுலேயும் குழம்பி போயாச்ச்சு. சரி போற வரைக்கும் போவோம்னு போனேன் அப்போ எனக்கு முன்னால ஒரு பையன் லோடு ஏத்திகிட்டு டிவிஎஸ் எக்ஸெல்-ல போயிகிட்டிருந்தாரு அவருகிட்ட கல்லணைக்கு எப்படி போறதுன்னு கேட்டேன். என்கூடவே வாங்கன்னு சொல்லி கூட்டிகிட்டு போனாரு. கொஞ்ச தூரம் போனதுக்கு அப்பரமா ஒரு வழிய காட்டி இந்த ரோடு நேரா பை-பாஸ் போயி சேரும் அப்படின்னு வழி காட்டுனாரு, அவருக்கு என் நன்றியை சொல்லிட்டு கிளம்பினேன். அவர் சொன்ன மாதிரியே கரெக்டா அந்த ரோடு வந்து சேர்ந்துட்டேன். அவருக்கு மறுபடியும் என் நன்றியை இங்கே சொல்லிக் கொள்கிறேன். அப்படியே அங்கேயே ஒரு நல்ல “டீ” குடிச்சிட்டே நினைச்சேன் திருப்பூர்ல கிடைக்கிறதெல்லாம் டீயா? ரொம்ப கேவலமா இருக்கும். இருந்தாலும் வேற வழியில்ல அதைதான் குடிக்கிறேன். டீ குடிச்சிட்டு கொஞ்ச நேரம் மொபைல்-ல கடல போட்டுட்டு கிளம்பினேன் நல்லா இருட்டிடுச்சு.
                                

போற வழியெல்லாம் பாதி இடங்கள்ள தெரு விளக்கு எதுவுமே இல்ல. ஏதோ அடர்ந்த காட்டுக்குள்ள போற மாதிரி ஒரு ஃபீலிங். சின்னதா ஒரு பயம் வேற. ரோட்டோட ஒரு பக்கம் ஆறு, மறுபக்கம் கரும்பு தோட்டம். யாராவது வழிப்பறி பண்ணினாகூட ஒன்னும் பண்ண முடியாது. திருநெல்வேலி அல்வா போல திருவையாறு அசோகா அல்வா ரொம்ப ஃபேமஸ்ங்க அதனால ஒரு வழியா திருவையாறு போய் சேர்ந்துட்டு, திருவையாறுலேயே ரொம்ப ஃபேமஸான ஆண்டவர் அல்வா கடையில சுடச்சுட “அசோகா அல்வா” வாங்கிகிட்டு கிளம்பினேன். அந்த கடையோட முதலாளிய பார்க்கணுமே சும்மா வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை போட்டுகிட்டு நெற்றி நிறைய 2 ரூபாய் நாணய அளவுக்கு குங்கும பொட்டோட பக்தி பரவசமா இருப்பாருங்க. அதோட அவரு வயசு வித்தியாசம் இல்லாம இல்லாம எல்லாரையும் வாங்க ஐயா, நன்றிங்க ஐயா அப்படின்னு மரியாதையாதான் அழைப்பார். எத்தனை பேரு இந்த காலத்துல மரியாதை கொடுத்து பேசுறாங்க? பணம் வந்தா எல்லாமே மாறிடுது.
எப்படியோ ஒரு வழியா இரவு 08:30 மணிக்கு வீட்டுக்கு போய் சேர்ந்தாச்சு. வீட்ல எல்லாரும் என்னடா இப்படி கருத்து போயி வந்திருக்க அப்படின்னு கேட்டுடாங்க. பைக்ல போனதால புழுதி மண் எல்லாம் என்மேல இருந்து என்னோட கலரே மாறிடுச்சு. க்ளீன் பண்ணினதுக்கு அப்பறம்தான் என்னோட ஒரிஜினல் கலரே வந்துச்சு. ரொம்ப நாளைக்கு அப்பறம் வீட்டு சாப்பாடு கிடைச்சுச்சு. நல்லா திருப்தியா சாப்பிட்டுட்டு படுத்ததுக்கு அப்பறம்தான் பிரச்சனையே ஆரம்பிச்சது. என்னோட ரெண்டு தோள்பட்டையும் பயங்கரமா வலிக்க ஆரம்பிச்சது. அய்யோ ரொம்ப நேரம் தூக்கமே வரல என்ன பண்றது? வழக்கம்போல கை வலியோட எஸ்எம்எஸ் சாட் பண்ணிகிட்டு இருந்தேன். அப்பறம் எப்போ தூங்கினேன்னு எனக்கே தெரியல,
பதிவு ரொம்ப நீளமாயிடுச்சுனு நினைக்கிறேன். இதுக்கு மேல போனா யாரும் படிக்க மாட்டீங்கன்னு தெரியும். மற்ற விஷயங்களை அடுத்த பதிவுல சொல்றேன்.
(தொடரும்) 
 

Friday, January 14, 2011

பொங்கல் நல்வாழ்த்துகள்

pongal scraps greetings for orkut
pongal scraps greetings for orkut
pongal scraps greetings for orkut
pongal scraps greetings for orkut
Pongal Greetings, Pongal Orkut Scraps, Graphics

Monday, January 3, 2011

10 ஆண்டுகளில் பிடித்த 100 பாடல்கள் (2001 – 2010) பாகம் – 03 / 10 வருடம் 2003

அனைவருக்கும் வணக்கம்,
இந்த புதிய ஆண்டில் என்னுடைய முதல் பதிவு இது. இந்த ஆண்டு முதல் தொடர்ந்து எழுதலாம் அப்படின்னு முடிவு பண்ணியிருக்கேன். இதுவரை ஆதரவு அளித்து வந்த அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். தொடர்ந்து இந்த ஆண்டும் உங்களின் மேலான ஆதரவை எதிர் நோக்கி ஏற்கனவே எழுதிய பதிவை தொடர்ந்து எழுதுகிறேன். 


போன பதிவில் 2002 - ல் எனக்கு பிடித்த பாடல்களை வெளியிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் 2003 - ம் ஆண்டில் எனக்கு பிடித்த பாடல்கள்.

2003 – ல் எனக்கு பிடித்த 10 பாடல்கள்
01
பாடல்        : எகிறி குதித்தேன் வானம் இடித்தது..
படம்         : பாய்ஸ்
பாடகர்கள்   : கார்த்திக், சித்ரா சிவராமன்
இசை       : A.R.ரஹ்மான்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
02
பாடல்        : கவிதையே தெரியுமா...
படம்         : ஜெயம்
பாடகர்கள்   : ஆர்.பி.பட்நாயக், ஹரணி
இசை       : ஆர்.பி.பட்நாயக்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
03
பாடல்        : ஆசை ஆசை இப்பொழுது...
படம்         : தூள்
பாடகர்கள்   : சுஜாதா, சங்கர் மகாதேவன்
இசை       : வித்யாசாகர்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
04
பாடல்        : காதல் வந்தால்...
படம்         : இயற்கை
பாடகர்கள்   : சுஜாதா, சங்கர் மகாதேவன்
இசை       : வித்யாசாகர்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
05
பாடல்        : எனக்கு பிடித்த பாடல் அது...
படம்         : ஜூலி கணபதி
பாடகர்கள்   : ஸ்ரேயா கோஷல்
இசை       : இளையராஜா
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
06
பாடல்        : நெஞ்சோடு கலந்திடு...
படம்         : காதல் கொண்டேன்
பாடகர்கள்   : சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
இசை       : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 

07
பாடல்        : ஒரு ஊரில் அழகே உருவாய்...
படம்         : காக்க காக்க
பாடகர்கள்   : கார்த்திக்
இசை       : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 

08
பாடல்        : நீ தூங்கும் நேரத்தில்..
படம்         : மனசெல்லாம்
பாடகர்கள்   : ஹரிஹரன்
இசை       : இளையராஜா
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
09
பாடல்        : என்ன இது  என்ன இது...
படம்         : நள தமயந்தி
பாடகர்கள்   : ரமேஷ் விநாயகம், சின்மயி
இசை       : ரமேஷ் விநாயகம்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
10
பாடல்        : பெண்ணே நீயும் பெண்ணா...
படம்         : ப்ரியமான தோழி
பாடகர்கள்   : கல்பனா, உன்னி மேனன்
இசை       : எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ
முந்தைய பதிவு:
பாகம் - 01/10 வருடம் 2001 
பாகம் - 02/10 வருடம் 2002

தொடரும்...

நன்றி: ஒவ்வொரு வருடத்தின் திரைப்படங்களை பட்டியலிட்டு தந்த விக்கிபீடியாவிற்கும், புகைப்படங்கள் மற்றும் மற்ற தகவல்களைத் தேடித் தந்த கூகிளுக்கும் நன்றி!!!