ஆனால் ஒரு படம் வெளியான நாள் முதலா இன்றுவரை ஒரே திரையரங்கில்தொடர்ந்து 15 வருடங்களாக வெற்றிநடை போட்டு வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. அது என்ன படம்-னு உங்க எல்லாருக்குமே தெரியும்னு நினைக்கிறேன். அந்த படம் "Dilwale Dulhania Le Jayenge".
15 வருடங்களுக்கு முன்பு 20-10-1995 -ல் மும்பை மராத்தா மந்திர் (Maratha Mandir) திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் இன்றும் தொடர்ந்து அதே திரையரங்கில் ஓடிக்கொண்டுள்ளது. இந்த மாதம் 21-10-2010 தனது 15 வது வருடம் மற்றும் 783 வாரங்களை நிறைவு செய்துள்ளது. தினமும் காலை 11:30 காட்சியாக இன்றும் திரையிடப்படுகிறது.
வருகின்ற ஜனவரி 2011-ல் தனது 800 வது வாரத்தை நிறைவு செய்கிறது. இதுதான் இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்.
தொலைக்காட்சியில் பல முறை ஒளிபரப்பப்பட்டும், DVD-களாக வெளியிடப்பட்டும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இந்த திரைப்படத்தின் சென்ற வார வசூல் 20000.
இந்த அளவிலான சாதனையை எந்திரனால் படைக்க முடியுமா? மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பதுதானே சாதனை? அப்போ இது எந்திரனுக்கு சவாலான திரைப்படம்தானே?
இந்த படம் இந்த அளவுக்கு வெற்றிகரமா ஓடிக்கொண்டிருக்க என்ன காரணம்னு நீங்க நினைகிறீங்கன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க.
குறிப்பு: இது எந்திரனுக்கு எதிரான பதிவு அல்ல. எதிரானதுன்னு நீங்க நினைச்சா நினைச்சிட்டு போங்க. அதைப்பற்றி எனக்கு கவலை இல்ல. நான் எனக்கு என்ன தோணுதோ அதை எழுதிகிட்டே இருப்பேன்.